Wednesday, July 15, 2009

காசி ஆனந்தன்

மந்தை

மேடை

“தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா நீ”
என்றேன்.

கை தட்டினான்.










இலக்கியம்




களத்தில்
நிற்கிறேன்...

என்

இலக்கியத்தில்

அழகில்லை

என்கிறாய்.

தோரணம்

கட்டும்

தொழிலோ எனக்கு?

வாளில்

அழகு தேடாதே

கூர்மை பார்.





குப்பைத் தொட்டி

அலுவலகத்தில்

இருக்கிறவனுக்கு

இது...

குப்பைத்தொட்டி

குப்பைப் பொறுக்கி

வாழ்கிறவனுக்கு

இது

அலுவலகம்...

மானம்

உன் கோவணம்

அவிழ்க்கப்பட்டதா?

அவன்

கைகளை

வெட்டு.

கெஞ்சி வாங்கி

கோவணம்

கட்டாதே.

அம்மணமாகவே

போராடு..

No comments:

Post a Comment


எனது எண்ணம்...


My Songzz...