Thursday, June 25, 2009

நாடில்லா தமிழனைக் கண்டு - உலக
நாடுகளே அஞ்சுகின்றன..
நடுங்கிச் சாகின்றன..
அதனாலே தமிழனுக்கு
நயவஞ்சகம் செய்கின்றன..
நரித்தனம் புரிகின்றன..
நட்டாற்றில் தள்ளிவிட்டு - பிணம்போல
மௌனமாகி நிற்கின்றன..!

~@ஆய்தன்:-

ஒப்பிட்டேன்...ஓலமிட்டேன்...

நன்று செய்யும் அரசு இதுவென நம்பி சிந்திய கண்ணீர் கடலென ஆகும் என ஆங்காங்கே சுட்டினேன். ஊழல் பல செய்வோரை இனங்கண்டு திட்டினேன். நம்மவருக்கு உதவமறுக்கும் ஆட்சியாளர்கள் யாவரென காண்பாய் என தம்பிகள் பலரிடம் கணிணி ஓலையிட்டேன். மற்ற இனத்தவர் அனுபவிக்கும் சலுகைகளை ஒப்பிட்டேன். நம்மவர் நிலையெண்ணி ஓலமிட்டேன்.

-‘என்றும் சிறியவன்’ ஆ.திருவேங்கடம் -

எனது எண்ணம்...


My Songzz...